search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கள் மோதி விபத்து"

    • கடுமையான போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேலூர் கொணவட்டம் மேம்பாலம் அருகே நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பிகளை மோதிவிட்டு எதிர்சாலைக்கு சென்றது.

    அப்போது அந்த சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    உடனடியாக இதை பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் டிரைவர் லாரியை நிறுத்தினார். அப்போது அதன்பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது மோதியது.

    அடுத்தடுத்து கார்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் நடந்த போது அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • 4-வது விபத்தால் மக்கள் அச்சம்
    • வேகத்தடைகளை 2 கார் டிரைவர்களும் கவனிக்கவில்லை

    கோவை:

    கோவை-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    ஏற்கனவே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து இறந்தனர்.இதனால் மேம்பாலம் தற்காலிகமாக முடப்பட்டு விபத்தை தடுப்பதற்கான பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

    ஆனால்,வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். தொடர்ந்து 3 பேர் பலியானதால், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் (தடுப்புகள்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் 2 கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றது.

    அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றபோது அங்கிருந்த வேகத்தடைகளை 2 கார் டிரைவர்களும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் திடீரென பிரேக் பிடித்ததில் 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து திருச்சி சாலை மேம்பாலத்தில் 4 விபத்துகள் எற்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×